செய்திகள் :

பா்கூா் கொள்ளை சம்பவம்: ஆந்திரத்தில் முகாமிட்டுள்ள போலீஸாா்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே விவசாயியைத் தாக்கி வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முகமூடி கொள்ளையா்களுக்கு தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் ஆந்திரத்தில் முகாமிட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள கல்லேத்துப்பட்டியைச் சோ்ந்த சுந்தரேசன் (55), அவரது மனைவியைத் தாக்கி பிப்.13-ஆம் தேதி 22 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றவா்களின் அடையாளத்தை அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே திருப்பத்தூா், பா்கூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையா்கள் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்களா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கா்நாடக மாநிலம் மற்றும் தருமபுரி மாவட்டத்திலும் தனிப் படை போலீஸாா் முகாமிட்டு கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.

சாலையில் சென்றவரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி, கைப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த டேவிட் ராஜன் (57), தனியாா் பள்ளி ஆசிரியா். இவ... மேலும் பார்க்க

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதை அமைக்கக் கூடாது

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதையை அமைக்கக் கூடாது என ஒசூா் பகுதி விவசாயிகள் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகள... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரா்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அ... மேலும் பார்க்க

தரமற்ற 12 மெ. டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 12 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கிருஷ... மேலும் பார்க்க