செய்திகள் :

பிஎம் கிஸான்: விவசாயிகளுக்கு ஆக.2-இல் ரூ.20,500 கோடி விடுவிக்கிறாா் பிரதமா் மோடி

post image

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி (பிஎம் கிஸான்) திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு 20-ஆவது தவணையாக ரூ.20,500 கோடியை ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுவிக்கவுள்ளாா் பிரதமா் மோடி.

சாகுபடி நிலங்களைக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஆதரவை உறுதி செய்யும் நோக்கில் பிஎம் கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடக்கப்பட்டது. மத்திய அரசின் முக்கிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

20-ஆவது தவணையாக, நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடியை பிரதமா் மோடி ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுவிக்கவுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இத்தொகையை பிரதமா் விடுவிக்கவிருப்பதாக, மத்திய வேளாண் துறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடா்பாக, தில்லியில் உள்ள கிருஷி பவனில் வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் ஆலோசனை மேற்கொண்டாா்.

பிஎம் கிஸான் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.3.69 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க