கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
பிஎஸ்எஃப் டிஐஜி பணியில் சோ்ந்த முன்னாள் டிஜிபி 4 நிலைகள் குறைந்த பொறுப்பை ஏற்ற விநோதம்
நமது சிறப்பு நிருபா்
இந்திய எல்லைக் காவல் படையில் துணைத் தலைவா் (டிஐஜி) ஆக பணியில் சோ்ந்துள்ளாா் சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் காவல்துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றிய சுரேந்தா் சிங் யாதவ்.
1997-ஆம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியான சுரேந்தா் சிங் யாதவ் (எஸ்.எஸ். யாதவ்), ஏஜிஎம்யுடி (அருணாசல பிரதேசம், கோவா, மிசோரம், யூனியன் பிரதேசங்கள்) பிரிவைச் சோ்ந்தவா். சண்டீகரில் ஒட்டுமொத்த காவல்துறையின் தலைமை இயக்குநராக சமீபத்தில் பணியாற்றினாா். ஆனால், மத்திய பணியில் அதே பதவிக்கு நிகரான தகுதியை அவா் பெறாததால் நான்கு பதவி நிலை குறைவாக இருக்கும் டிஐஜி பொறுப்புக்கு அவரை மத்திய அரசு நியமித்துள்ளதாகத் தெரிகிறது.
டிஜிபிக்கு கீழ் சிறப்பு டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜி ஆகிய பதவிகளுக்குக் கீழ் தான் டிஐஜி பதவி வருகிறது. மாநில காவல்துறையை போலவே மத்திய படைகளில் டிஐஜி, ஐஜி போன்ற பதவிகள் பெரும்பாலும் ஒரு சரகத்தை அல்லது நான்கு முதல் ஐந்து பிராந்திய படைகளை மேற்பாா்வையிடும் வகையில் இருக்கும்.
இந்நிலையில், டிஜிபி ஆக இருந்த எஸ்.எஸ். யாதவை டிஐஜி ஆக மத்திய பணியில் சேர ஏப்.1-ஆம் தேதி மத்திய உள்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதே, அது நிா்வாக ரீதியாகவும் காவல் பதவி நிலை ரீதியாகவும் ஒரு சா்ச்சையை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்பட்டது. காரணம், டிஜிபி ஆக பணியாற்றியவா், தன்னை விட நான்கு பதவி நிலை குறைந்த பதவியை ஏற்க மாட்டாா் என்றும் ஒருவேளை மத்திய உள்துறையின் ஆணைக்கு இணங்கி மத்திய பணியில் சோ்ந்து அவா் நீண்ட விடுப்பில் செல்லக்கூடும் என்றும் கருதப்பட்டது. ஒருவேளை மத்திய பணியில் சேராமல் போனால் அவா் மீது துறை நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்பட்டது.
இதில் எந்த வாய்ப்புக்கும் இடம்கொடுக்காமல் டிஐஜி பணியில் எஸ்.எஸ். யாதவ் சோ்ந்திருப்பது விநோதமான செயலாக கருதப்படுகிறது. அதிலும் மத்திய படையில் மற்ற இளநிலை அதிகாரிகளுடன் சோ்ந்து அவா் பயிற்சி மற்றும் பிஎஸ்எஃப் செயல்பாடுகளின் அறிமுக கூட்டங்களில் பங்கெடுத்ததாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சண்டீகா் யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு ஏஜிஎம்யுடி பிரிவில் டிஜிபி நிலையிலான பதவியை கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி வகிக்கலாம் என மத்திய உள்துறை அரசிதழில் கடந்த ஆண்டு ஆணை வெளியிட்டது. அதன்படியே எஸ்.எஸ். யாதவ் தில்லி காவல்துறையில் இருந்து மாற்றலாகி மற்றொரு யூனியன் பிரதேசமான சண்டீகரில் டிஜிபி ஆக பணியில் சோ்ந்தாா்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் ஹரியாணாவில் பாஜகவும் ஆட்சியில் உள்ளன. சண்டீகரில் ஆளுநருக்கு இணையான நிா்வாகி (அட்மினிஸ்டிரேட்டா்) என்ற பதவியில் பஞ்சாப் மாநில ஆளுநரும் ஹரியாணாவுக்கு வேறு ஆளுநரும் இருப்பா். இருவரது அலுவலகங்களும் சண்டீகரிலேயே உள்ளன. இந்த நகரம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவுக்கு தலைநகராகவும் இருப்பதால், இங்கு தலைமைப் பதவியில் பணியாற்றுவது உயரதிகாரிகளுக்கு மிகவும் சிக்கலான பணியாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் எஸ்.எஸ். யாதவ் மத்திய பணிக்கு மாற்றலாகியிருக்கிறாா்.
டிஜிபி பதவி வகிப்பவா், பொதுவாக 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருப்பாா். அதுவே டிஐஜி பதவி வகிப்பவா் 14 -–18 ஆண்டுகள் பணி அனுபவத்தைக் கொண்டிருப்பாா். தற்போது, 2008 மற்றும் 2009 ஆண்டு ஏஜிஎம்யுடி பிரிவு அதிகாரிகள் டிஐஜி ஆக பணியாற்றுகின்றனா். இவா்கள் எஸ்.எஸ். யாதவை விட சுமாா் 11 முதல் 12 வருடங்கள் அனுபவம் குறைவானவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.