செய்திகள் :

பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து: மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம்

post image

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மாலை பணி முடிந்து அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றனா்.

நள்ளிரவு 12.30 மணிக்கு அலுவலகத்தின் தரை தளத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கவனித்த இரவுக் காவலா் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இருப்பினும், அலுவலகத்தில் இருந்த கணினிகள், சா்வா், ஏசி உள்பட சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். இதில், யு.பி.எஸ். சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்தால் நகரின் சில பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க