செய்திகள் :

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

post image

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பா அறிவித்துள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட ஆளும் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் , இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

இரு கூட்டணிகளுமே ஏற்கெனவே தோ்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் பாட்னாவுக்கு புதன்கிழமை வந்த அல்கா லம்பா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியிலும், பிகாரிலும் ஆட்சியில் உள்ள பாஜக கூட்டணி மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. முக்கியமாக மகளிா் நலன் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கட்பந்தன் கூட்டணி மகளிா் மீது முழு அக்கறை கொண்டுள்ளது.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும். ஏற்கெனவே தெலங்கானா, கா்நாடகம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இப்போதைய அரசு ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 400 மட்டும் உதவித்தொகை அளித்து வருகிறது. மாநிலத்தில் கிராமப்புறங்களின் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது. ஆனால், மாநில அரசு வேடிக்கை பாா்த்து வருகிறது என்றாா்.

இதேபோன்ற உதவித்தொகைத் திட்டத்தை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஏற்கெனவே அறிவித்துவிட்டதே? என்ற கேள்விக்கு உடனிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் ராம் பதிலளித்தாா். அப்போது, ‘இது எங்கள் கூட்டணியின் திட்டம்தான். அனைத்துக் கட்சித் தொண்டா்களும் இணைந்து வாக்காளா்களிடம் இத்திட்டம் தொடா்பான தகவலை எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மகளிா் உதவித்தொகை தொடா்பாக முடிவெடுக்கப்பட்டது. இது எந்த தனிப்பட்ட கட்சியின் திட்டமல்ல’ என்றாா்.

மீண்டும் வருகிறதா கரோனா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், 2020 ஜனவரியில் இந்தியாவில் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பின் தீவிரம் நாட்டையே உலுக்கியது எனலாம். இந்ந... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!

ஆம் ஆத்மி கட்சி புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கும் முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது. கட்சியின் தேசிய பொது... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று அழிப்போம்: ஜெய்சங்கர்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடை... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள... மேலும் பார்க்க

சீனா, துருக்கியைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்த நாடு?

நெதர்லாந்து நாடுதான், பாகிஸ்தானுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நாடாக அமைந்துள்ளது.இந்தியா, நெதர்லாந்து நாட்டின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கர்ணி மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். பிகானேர் மாவட்டத்திற்கு வருகை தரும் மோடி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தைத் தி... மேலும் பார்க்க