செய்திகள் :

பிகாரில் ராகுல் தலைமையில் வெள்ளை டி-ஷர்ட் பேரணி

post image

பிகாரிலிருந்து வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதை நிறுத்தக் கோரியும், இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் இன்று வெள்ளைச் சட்டை பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெகுசராய் நகரின் மத்தியப் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் தொடங்கிய இந்தப்பேரணியில் கன்னையா குமார், மாநில தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளைச் சட்டையுடன் இளைஞர்கள் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில், உடனடியாக பாதுகாப்புப் படைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தும் பதாகைகளை இந்தப் பேரணியில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் கையில் வைத்திருந்தனர். முழக்கங்களையும் எழுப்பினர்.

இடம்பெயர்வதை நிறுத்துங்கள், வேலை வாய்ப்பு வழங்குங்கள் என்ற தலைப்பில் இன்று நடைபெற்று வரும் பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்து ராகுல் முன்னதாக ஒரு விடியோ வெளியிட்டிருந்தார். அதில், பிகார் இளைஞர்களே, நான் உங்கள் பேரணியில் உங்களின் தோளோடு தோள் நின்று போராட பெகுசாரை வருகிறேன்.

பிகார் இளைஞர்களின் பிரச்னை, போராட்டம், உணர்வு என அனைத்தையும் உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே இந்த நடைப்பயணத்தின் நோக்கம் என்றும், அனைவரும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து வாருங்கள், கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளை எழுப்புங்கள், வரும் பேரவைத் தேர்தலில் அந்த அரசை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா். மும்பை பங்குச் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க