செய்திகள் :

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

post image

பிகாரில் மூன்று அம்ரித் பாரத் ரயில்களையும், நான்கு புதிய பயணிகள் ரயில்களையும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

தர்பங்காவிலிருந்து அஜ்மீர் வரையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முசாபர்பூரிலிருந்து ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் மற்றும் சாப்ரா முதல் தில்லி வரையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களும், நான்கு புதிய பயணிகள் ரயில்களும் தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்ட மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிகாரில் 62 நிறுத்தங்களுடன், 25 மாவட்டங்களை இணைக்கும், இது மக்களுக்கான இணைப்பை அதிகரிக்கும்.

பிகாரில் ரயில்வே துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை எடுத்துரைத்த அவர், பிகாரில் முன்பு ரூ.1000 கோடி மட்டுமே ரயில்வே பட்ஜெட் இருந்தது, அது இப்போது ரூ. 10 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ரயில்வே முழுமையாக மின் மயமாக்கப்பட்டுள்ளது. 1899 கி.மீ புதிய பாதைகள் அமைக்கப்பட்டன. மேலும் பல திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.

தற்போது பிகாரில் 28 வந்தே பாரத் சேவைகள் இயக்கப்படுகின்றன. 25 மாவட்டங்களை 42 நிறுத்தங்களுடன் இணைக்கின்றன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 28 மாவட்டங்களில் 62 தனித்துவமான நிறுத்தங்களுடன் உள்ளடக்கப்படும். பிகாரில் நமோ பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் கூறினார்.

வரவிருக்கும் தீபாவளி மற்றும் சத் பூஜைக்கான ஏற்பாடுகளை எடுத்துரைத்த அவர், கடந்தாண்டு, சத் மற்றும் தீபாவளியின் போது 7,500-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த முறை 12,500-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் ஆசிர்வாதத்துடனும், முதல்வரின் தலைமையுடனும், பிகாரில் ரயில்வே மேம்பாடு வேகமாக முன்னேறி வருகிறது. வரும் காலங்களில், பிகார் அதன் புகழ்பெற்ற வரலாற்றை மீட்டெடுக்கும், நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கும் என்று அவர் கூறினார்.

Union Railways Minister Ashwini Vaishnaw flagged off three Amrit Bharat Express Trains and four new passenger trains for Bihar via video conferencing.

இதையும் படிக்க:வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

லடாக் வன்முறை: லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுயில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள... மேலும் பார்க்க

காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 7 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திங்கள்கிழமை மீண்டும் திறந்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த தலைமையகக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

பிகாரில் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்

பிகாரில் முதல்வர் நிதீஷின் சொந்த மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த... மேலும் பார்க்க

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி

மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் உள்பட 3 பேரி பலியாகினர். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஷ்யாம்நகர் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு தண்டவாளத்தை ... மேலும் பார்க்க