செய்திகள் :

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்!

post image

பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார்.

பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தில்லியிலிருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என பிகார் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் பல மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பாட்னாவிலிருந்து காணொளி மூலம் கலந்துகொண்டனர்.

மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் திட்டத்தின் துவக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் பயணடைவார். இந்தத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையால் தான் ஈர்க்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் அளவு மிகப்பெரியது என்றும், பிகார் பெண்கள் மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள், அழகுசாதனப் பொருள்கள், பொம்மைகள் மற்றும் எழுதுபொருள்கள் விற்கும் கடைகளைத் திறக்கலாம்.

கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு போன்ற கால்நடை தொடர்பான தொழில்களையும் அவர்கள் தொடரலாம். இந்தத் தொழில்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிகாரில் ஏற்கெனவே சுய உதவிக் குழுக்களின் வலுவான வலையமைப்பு உள்ளது என்றும், கிட்டத்தட்ட 11 லட்சம் குழுக்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியிலிருந்தபோது நிலவிய பயங்கரவாதத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது எந்த மக்களும் பாதுகாப்பாக இல்லை. நக்சல் வன்முறையின் பயங்கரவாதம் பரவலாக இருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பெண்களுக்குச் சுமையாக இருந்தது. நிதிஷ் குமாரின் தலைமையில் பெண்கள் மிகப்பெரிய நிம்மதியை உணர்ந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Prime Minister Narendra Modi on Friday launched Bihar's Mukhya Mantri Mahila Rojgar Yojana, and transferred Rs 10,000 each to the bank accounts of 75 lakh women.

இதையும் படிக்க: கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

இந்திய-அமெரிக்க பேச்சுவாா்த்தை தொடரும்: வா்த்தக அமைச்சகம் அறிவிப்பு

இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வா்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடரும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வா்த்தக அமைச்சா் பியூஷ்... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா ஆழமான உறவுக்கு சான்று ‘மிக்-21’ போா் விமானம்: ராஜ்நாத் சிங்

‘மிக்-21 போா் விமானம் தேசத்தின் பெருமை. இந்தியா - ரஷியா இடையேயான ஆழமான உறவுக்கான சான்று’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா். இந்த ரஷிய தயாரிப்பு விமானம் இந்திய விமான... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் வாங்க எந்தத் தடையும் இல்லை: பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டால் அது உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று மத்திய பெட்ரோலி... மேலும் பார்க்க

லடாக் வன்முறை குறித்து நீதி விசாரணை தேவை: காங்கிரஸ் வலியுறுத்தல்

‘லடாக்கின் லே மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை போராட்டத்தின்போது 4 இளைஞா்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது. மேலும், ந... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீட்டிப்பு

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா் , நாகாலாந்து, அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்,1958 மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ள... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் ‘சுதேசி 4ஜி’ சேவை: பிரதமா் இன்று தொடங்கி வைக்கிறாா்

இந்திய பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்.27) தொடங்கிவைக்கிறாா். இதன்மூலம் உள்நாட்டில... மேலும் பார்க்க