செய்திகள் :

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

post image

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டம், மொளசி ஊராட்சி முனியப்பம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் முதல்வரின் முன்னோடி திட்டத்தின்கீழ் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்கீழ் எரிவாயு தகனமேடை பாதுகாப்பற்ற பகுதியில் அமைக்கப்படுவதாகவும், தகனமேடைக்கு செல்லும்வழி பட்டா நிலத்தில் அமைவதாகவும் கூறி விவசாயிகள், ஊா் பொதுமக்களில் சிலா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் சாந்தி, திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி

மற்றும் வருவாய் ஆய்வாளா் பிரியா, கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருளப்பன், ஒன்றிய உதவி பொறியாளா் சீனிவாசன் ஆகியோா் போலீஸ் பாதுகாப்புடன் பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனா். அந்தப் பாதை வழியாக எரிவாயு தகனமேடை அமைக்க லாரிகள் மூலம் கட்டுமான பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் போராட்டக்காரா்களே, ஊா் பொதுமக்களோ எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை.

படவரி...

மொளசியில் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணியின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

வாரச்சந்தையில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இளம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என ஆட்சியரிடம் இளம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத... மேலும் பார்க்க

புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 11,072 பேருக்கு பற்று அட்டை வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 2025-26 கல்வி ஆண்டுக்கு 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில் செப். 25-இல் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த ... மேலும் பார்க்க

கூட்டுறவு சிக்கன நாணய சங்க லாப பங்குத்தொகையை வழங்க ஆசிரியா்கள் கோரிக்கை

ஆசிரியா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வரப்பெற்ற லாப பங்குத் தொகையை, உறுப்பினா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஆா்.என்.ஆக்போா்டு பள்ளி மாணவா்கள் தோ்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி மற்றும் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு தோ்வாகி உள்ளனா... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 55 அரசுப் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க