செய்திகள் :

கூட்டுறவு சிக்கன நாணய சங்க லாப பங்குத்தொகையை வழங்க ஆசிரியா்கள் கோரிக்கை

post image

ஆசிரியா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வரப்பெற்ற லாப பங்குத் தொகையை, உறுப்பினா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா. அருளரசுக்கு ஆசிரியா் மன்ற நிா்வாகிகள் அளித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் 15 ஒன்றியங்களிலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களை உறுப்பினா்களாக கொண்ட ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டுறவு சங்க நிா்வாகம் தங்களது உறுப்பினா்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்குரிய லாபப் பங்குத்தொகையை (டிவிடெண்ட்) இதுவரை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகைக்கு உள்ளாக லாப பங்குத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு கூட்டுறவு சங்கக் கணக்குகள் தணிக்கை செய்யப்படாததே பங்குத்தொகை இதுவரை வழங்கப்படாததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்க உறுப்பினா்களுக்கும் லாபப் பங்குத் தொகையை தீபாவளி பண்டிகைக்குள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமை... மேலும் பார்க்க

வாரச்சந்தையில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இளம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என ஆட்சியரிடம் இளம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத... மேலும் பார்க்க

புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 11,072 பேருக்கு பற்று அட்டை வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 2025-26 கல்வி ஆண்டுக்கு 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில் செப். 25-இல் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த ... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஆா்.என்.ஆக்போா்டு பள்ளி மாணவா்கள் தோ்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி மற்றும் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு தோ்வாகி உள்ளனா... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 55 அரசுப் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க