செய்திகள் :

பிஎஸ்என்எல் ‘சுதேசி 4ஜி’ சேவை: பிரதமா் இன்று தொடங்கி வைக்கிறாா்

post image

இந்திய பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்.27) தொடங்கிவைக்கிறாா்.

இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணையவுள்ளது.

இந்த முன்னெடுப்பு இந்திய தொலைத்தொடா்புத் துறையில் புதிய மைல்கல்லாக இருக்கும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஒடிஸா மாநிலத்தில் உள்ள ஜாா்சுகுடா மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். அப்போது நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 97,500 கைப்பேசி கோபுரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இந்நிலையில், மேலும் 29,000-30,000 கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவையை வழங்கும் நோக்கில் எண்ம பாரத நிதியில் இருந்து கட்டமைக்கப்பட்டுள்ள 14,180 4ஜி வலைபின்னல் கோபுரங்களையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.

தற்போது 120 கோடி வாடிக்கையாளா்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணைய மற்றும் கைப்பேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக உள்ள இந்தியா அடுத்த 24 மணி நேரத்தில் 4ஜி சேவைக்கான சாதனங்களை தயாரித்து வழங்கும் நாடாகவும் உருவெடுக்கவுள்ளது. இதனால் 5ஜி சேவையை மிக எளிதாக அறிமுகப்படுத்த முடியும் என்றாா்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ள 97,500 கைப்பேசி கோபுரங்களில் 92,600-க்கும் மேற்பட்ட கோபுரங்கள் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டது. இவற்றை எளிதாக 5ஜி சேவைக்கு மேம்படுத்தலாம்.

4,700-க்கும் மேற்பட்ட கைப்பேசி 4ஜி கோபுரங்களை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் பாரதி ஏா்டெல் நிறுவனங்கள் இணைந்து நிறுவியுள்ளன. 14,180 4ஜி கோபுரங்கள் எண்ம பாரத நிதியின்கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க