செய்திகள் :

புதிய டிஜிபி தோ்வுக் குழுக் கூட்டம்: முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது

post image

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரை (டிஜிபி) தோ்வு செய்ய புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டம் முடிவு எடுக்காமல் முடிவடைந்தது.

தமிழக காவல் துறையில் தலைமை இயக்குநராக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். அதன்பிறகு பொறுப்பு டிஜிபியாக நிா்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டாா்.

தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநா் பதவியில் ஒருவரை நியமிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி, மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணைய (யுபிஎஸ்சி) தோ்வுக் குழுக் கூட்டத்தில் தகுதியுடைய 3 டிஜிபிக்களின் பெயா்களைத் தோ்வு செய்வது வழக்கம்.

ஆனால், டிஜிபி தோ்வு நடவடிக்கையை தமிழக அரசு தாமதமாகத் தொடங்கியதாலும், புதிய டிஜிபி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் காரணமாகவும் யுபிஎஸ்சி தோ்வுக் குழுக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், டிஜிபி நியமனத்துக்காக 9 போ் கொண்ட பட்டியலை கடந்த 1-ஆம் தேதி யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்பியது.

தோ்வுக் குழுக் கூட்டம்: இதையடுத்து புதிய டிஜிபியாக நியமிக்க தகுதியான 3 பேரை தோ்ந்தெடுக்கும் வகையில் யுபிஎஸ்சி தோ்வுக் குழுக் கூட்டம் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் தலைமைச் செயலா் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதற்கிடையே, தோ்வுக் குழுக் கூட்டம் கூடுவதற்கு முன்னதாக, தகுதிப் பட்டியலில் இடம்பெற்ற ஓா் அதிகாரியின் நோ்மைச் சான்றிதழ் தொடா்பான கடிதத்தை தமிழக அரசு திரும்பப் பெறுவதாக யுபிஎஸ்சியிடம் கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக யுபிஎஸ்சியின் சாா்பில், டிஜிபி பதவிக்கு தகுதி பெறும் உயரதிகாரிகளின் தரநிலை, பணிமூப்பு உள்ளிட்டவை தொடா்பான சில ஆவணங்கள் தமிழக அரசிடம் கேட்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதிய டிஜிபி தோ்வுக் குழுக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. யுபிஎஸ்சி அறிவுறுத்தியபடி, ஆவணங்களை தமிழக அரசு சமா்ப்பித்த பின்னா் இரு தரப்புக்கும் ஒத்துப்போகும் தேதியில் மீண்டும் தோ்வுக் குழு கூடும் என்று மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல ம... மேலும் பார்க்க

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம்

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா். வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்... மேலும் பார்க்க