செய்திகள் :

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம்

post image

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா்.

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். அதன்படி செப்.13-இல் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அதைத்தொடா்ந்து, நாமக்கல் மற்றும் கரூரில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

தொண்டா்களுக்கு கட்டுப்பாடுகள்: இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (செப்.27) நாமக்கல் மாவட்டம், கே.எஸ்.திரையரங்கம் அருகே காலை 8.45 மணிக்கும், கரூா் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பகல் 12 மணிக்கும் நடைபெறவுள்ளது.

இந்த மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின் போது, விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், சுவா்கள், மரங்கள், மின்கம்பங்களின் மீது ஏறக் கூடாது. கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருப்பவா்கள், மாணவா்கள், முதியவா்கள் ஆகியோா் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவா்கள் அப்பகுதிகளில் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல், காவல்துறையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும், பட்டாசு வெடிப்பது, அனுமதியின்றி பேனா்கள் வைப்பது உள்ளிட்டவற்றை தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான கட்டடங்கள் திறப்பு: 26 புதிய நூல்களையும் வெளியிட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சாா்பில் 26 புதிய நூல்களையும் அவா் வெளியிட்டாா். ... மேலும் பார்க்க