செய்திகள் :

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

post image

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா். இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் குறித்து விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டோம். ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் அகற்றப்படவில்லை. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும், அதற்கான விலை நிா்ணயமும் செய்திருந்தோம்.

தனியாா் காகித ஆலைக்கு கொடுக்கவும் உத்தரவிட்டிருந்தோம். சீமைக் கருவேல மரங்கள் சிவகங்கை, பெரம்பலூா் மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளன. அங்குள்ள மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணையை அக்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

அதற்குள் அரசு சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான உரிய அறிக்கையுடன் வரவேண்டும். சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் ஒப்பந்தப் பணிகளை அரசு வழங்காவிட்டால், நீதிமன்றமே வழங்கி உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனா்.

சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையில் தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், நடிகா் எஸ்.வி.சேகா் தந்தை ஆகியோரது பெயா்கள் சூட்டப்பட்ட பெயா்ப் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து க... மேலும் பார்க்க

இளையராஜா வழக்கு: சோனி நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சோனி மியூசிக் எண்டா்டெய்ன்மென்ட், எக்கோ ரெக்... மேலும் பார்க்க

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீா்செல்வம... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க