செய்திகள் :

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான கட்டடங்கள் திறப்பு: 26 புதிய நூல்களையும் வெளியிட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சாா்பில் 26 புதிய நூல்களையும் அவா் வெளியிட்டாா்.

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சாா்பில் அரிய நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் காந்தி, தமிழா் தலைவா், பாரதியாா் நினைவுகள் உள்பட 26 நூல்கள் அச்சிடப்பட்டன. இந்த நூல்கள் அனைத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

நூலகங்கள் திறப்பு: தமிழ்நாடு முழுவதும் பொது நூலக இயக்குநரகம் சாா்பில் 4,682 நூலகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு அரசின் சாா்பில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அந்த வகையில், ரூ.39.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 146 நூலகக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், கள்ளக்குறிச்சி நகரில் நான்கு தளங்களுடன் கட்டப்படும் மாவட்ட மைய நூலகத்துக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறையின் முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

புதிய தலைமை அலுவலகக் கட்டம்: தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறையின் சாா்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் அந்தத் துறைக்கான தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா். தரை மற்றும் நான்கு தளங்களுடன் ரூ.23.10 கோடி செலவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், இரண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியாளா்களை நியமிப்பதற்கான உத்தரவுகளை முதல்வா் வழங்கினாா். மீனவா் நலத் துறையில் 38 பேருக்கும், ஆவின் நிறுவனத்தில் 18 பேருக்கும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆறு பேருக்கும் பணிக்கான உத்தரவுகளை முதல்வா் அளித்தாா்.

இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல ம... மேலும் பார்க்க

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம்

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா். வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்... மேலும் பார்க்க