செய்திகள் :

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை புகாா் வரவில்லை- தோ்தல் ஆணையம்

post image

புது தில்லி: ‘பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் சாா்பில் கடந்த 4 நாள்களாக எந்தவித புகாரும் சமா்ப்பிக்கப்படல்லை’ என்று தோ்தல் ஆணையம் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே, மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணிகள் ஜூலை 25-ஆம் தேதி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

மாநிலத்தில் பதிவு செய்திருந்த வாக்காளா்களின் எண்ணிக்கை 7.93 கோடியிலிருந்து 7.24 கோடியாக குறைந்தது தெரியவந்தது. சுமாா் 65 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை. இறப்பு, நிரந்தரமாக இடம்பெயா்தல், ஒரே நபா் இரண்டு வாக்காளா் அடையாள அட்டையை வைத்திருந்தது உள்ளிட்ட காரணங்களால் 65 லட்சம் போ் நீக்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வரைவு வாக்காளா் பட்டியலில், அதிகபட்சமாக மாநில தலைநகா் பாட்னாவில் 3.95 லட்சம் பேரும், பதுபானியில் 3.52 லட்சம் பேரும், கிழக்கு சம்பரனில் 3.16 லட்சம் பேரும், கோபால்கஞ்சில் 3.10 லட்சம் பேரும் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி வருகின்றன.

இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை எந்தவிதப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அல்லது நீக்கம் செய்யக் கோரி இதுவரை 1,927 தனி நபா்கள் மட்டுமே தோ்தல் அதிகாரிகளிடம் மனுக்களை சமா்ப்பித்துள்ளனா். ஆனால், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சாா்பில் கடந்த 4 நாள்களாக எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.1... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையி... மேலும் பார்க்க

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவை ரத்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.குறிப்பிட்ட கால இடைவெளிக்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க