செய்திகள் :

பிபிஎல்: நாக்-அவுட் சுற்றில் வார்னர் அணி வெற்றி, ஸ்டாய்னிஸ் அணி வெளியேற்றம்!

post image

பிபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றில் இருந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெளியேறியது.

பிபிஎல் டி20 லீக் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியுற்று, கடைசி 5 போட்டிகளில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

குவாலிஃபையர் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் சிட்னி சிக்ஸர்ஸை வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

இந்த நிலையில் நாக் அவுட் சுற்றில் மெல்போஎன் ஸ்டார்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டர்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 135/7 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆலிவர் டேவிஸ் 36, மேத்திவ் கில்லிக்ஸ் 28, சாம் பில்லிங்ஸ் 24 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்து அசத்தினார். ஸ்டாய்னிஸ் சரியாக விளையாடமல் ஒருபுறம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் மேக்ஸ்வெல்லும் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பின்னர் இறுதியில் ஹில்டன் 15 ரன்களும் மார்க் ஸ்டீகெட்டே 18 ரன்களும் எடுத்தார்கள்.

சிட்னி தண்டர்ஸ் சார்பில் நாதன் மெக் ஆண்ட்ரூ 5 விக்கெட்டுகளும் டாம் ஆண்ட்ரூஸ், தன்வீர் சங்கா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

அடுத்ததாக சேலஞ்சர் சுற்றில் சிட்னி தண்டர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் ஜன.24ஆம் தேதி மோதுகிறது. இதில் வெல்லும் அணி ஜன.27ஆம் தேதி இறுதிப் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் உடன் மோதுகிறது.

யு19 மகளிர் கிரிக்கெட்- இந்தியாவுக்கு 83 ரன்கள் இலக்கு

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 83 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியி... மேலும் பார்க்க

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கி... மேலும் பார்க்க

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த விருத்திமான் சஹா!

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார்.இந்திய வீரரான விருத்திமான் சஹா, 141 முதல் தர போட்டிகளில் விளையாடி 7,169 ரன்கள் குவித்துள்ளா... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் பெத் மூனி சாதனை மேல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக நடை... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!

மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடை... மேலும் பார்க்க