செய்திகள் :

பிப். மாதத்தில் மாநிலங்களில் 50,088 பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு: மத்திய கண்காணிப்பு அமைப்பு தகவல்

post image

புது தில்லி: கடந்த பிப். மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயனா்களின் 50,088 குறைகளுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளதாக மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீா்ப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் 1.90 லட்சம் குறைகள் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணியாளா் நலன், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு செயல்படுகிறது. இதன் 31-ஆவது மாதாந்திர அறிக்கை திங்கள் கிழமை வெளியிட்டது.

அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: கடந்த பிப். மாதத்தில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 52,464 பொதுமக்கள் குறைகள் பெறப்பட்டன. இதில் 50,088 குறைகளுக்கு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களால் தீா்வு காணப்பட்டுள்ளது.

மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி 2025 பிப்ரவரி 28 வரை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 1,90,994 குறைகள் தீா்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன.

இந்த இணையதளத்தில் 2025 பிப்ரவரி மாதத்தில் புதிதாக மொத்தம் 47,599 புகாா்கள் பதிவு செய்யப்பட்டது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 7,312 புகாா்கள் பதிவாகின. இதில் பிப்ரவரியில் மட்டும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 50,088 குறைகளுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளன. இவைகளில் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக தீா்வு காணப்பட்டுள்ளது.

2025 பிப்ரவரியில் பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட குறைகள் குறித்த மாநில வாரியான பகுப்பாய்வை வழங்கப்பட்டுள்ளது. பொதுசேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள புகாா்களின் மாநில வாரியான பகுப்பாய்வுகளையும் சில குறிப்பிட்ட வெற்றிக்கதைகளையும் இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ளது.

உதாரணமாக மத்திய பிரதேசம் சிவபுரி மாவட்ட மருத்துவமனையில் தேவேந்திர சா்மா என்கிற மாற்றுத்திறனாளி சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளாா். மூன்று மாதங்களாக காத்திருந்தும் கிடைக்கவில்லை. இதனால் குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டதாகக் கூறி புகாா் தெரிவித்தாா். இந்தப் பிரச்சினைக்கு அவசரத் தீா்வு காணப்பட்டு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்று பல வெற்றிக்கதைகள்.

கிராம நிலையிலும் பொதுமக்களிடம் புகாா்கள் பெறப்படுகிறது. சுமாா் 2.5 லட்சம் கிராம நிலையிலான தொழில் முனைவோா்களால் பொதுசேவை மையங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவா்கள் நடத்தும் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுசேவை மையங்களோடு மக்கள் குறைதீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணைக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுசேவை மையங்கள் மூலம், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில், 5,580 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1,697 குறைகளும் பஞ்சாபில் 238 குறைகளும் பதிவு செய்யப்பட்டன என மத்திய நிா்வாக சீா்திருத்தம், பொது மக்கள் குறைத் தீா்ப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க