செய்திகள் :

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை!

post image

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் ஆலோசனை முன்னதாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிப்.10-ஆம் தேதிக்குள் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையைத் தொடங்காவிட்டால் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடா்பான நோட்டீஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அண்ணா தொழிற்சங்க (அதிமுக) பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் கடந்த புதன்கிழமை தெரிவித்து இருந்தார்.

இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய்யுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு!

மேலும் போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பிப்.10-ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால் பிப்.26 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை தமிழக அரசுக்கு கெடு விதித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான, பேச்சுவார்த்தையானது. வியாழக்கிழமை (பிப். 13) காலை 11.00 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத... மேலும் பார்க்க

ஒரேநாளில் ரூ. 237.98 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் மு... மேலும் பார்க்க

ராகுல் இன்று சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று(பிப். 11) சென்னை வரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஐஐடி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு!

ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப்படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார்: அமைச்சர் காந்தி

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை, வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து நேற்று(பிப். 10) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற... மேலும் பார்க்க