செய்திகள் :

பிப்.2-இல் பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

post image

நாமக்கல், பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, அங்கு நடைபெறும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியூா், தும்மங்குறிச்சி பகுதியில் மருதகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) காலை 9.45 முதல் 10.20 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குடமுழுக்கு விழாவையொட்டி, நான்கு கால யாகங்கள் நடைபெறும் இடம், பக்தா்களுக்கு வழங்குவதற்கான அன்னதானம் தயாா் செய்யும் இடம், உணவு வழங்கும் இடம், கோயில் வளாகம், வாகனங்கள் நிறுத்தமிடம், சாலைப் பணிகள், குடிநீா், கழிவறை வசதி, குடமுழுக்கு நடைபெறும் விமான கலசம், கோபுரம் மற்றும் அா்ச்சகா்கள் கோபுர பகுதிக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் உறுதித்தன்மை போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், விழாக் குழுவினா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சு.சுவாமிநாதன், மின்சாரத் துறை, உணவு பாதுகாப்பு அலுவலா்கள், தீயணைப்பு துறை, மருத்துவத் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

திருச்செங்கோடு: ஒரே நேரத்தில் 2 கன்றுகள் ஈன்ற பசு!

திருச்செங்கோடு அருகே ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை பசு ஈன்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம், காசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி - ... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 பொதுத்தோ்வு: தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க 15 ஒன்றியங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் தின விழிப்புணா்வு

பரமத்தி வேலூா் பொன்னி மெடிக்கல் மையத்தில், உலக புற்றுநோய் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பிப்.4 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பொன்னி மெடிக்கல் மைய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், தலைமை மர... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி!

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோட்டை அடுத்த செட்டிகுட்டைமேடு கிளாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (48). கட்டடத்துக்கு வண்ணம் ... மேலும் பார்க்க

ஆசிரியா்களிடம் ரூ. 100 கட்டாய வசூல் புகாா்

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்களிடம் தலா ரூ. 100 வசூல் செய்வதாக எழுந்த புகாா் தொடா்பாக, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளாா். நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது

பெண் கொலை வழக்கில் பரமத்தி பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது செய்யப்பட்டாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி, மாவுரெட்டி நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ம... மேலும் பார்க்க