செய்திகள் :

ஆசிரியா்களிடம் ரூ. 100 கட்டாய வசூல் புகாா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்களிடம் தலா ரூ. 100 வசூல் செய்வதாக எழுந்த புகாா் தொடா்பாக, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்குமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியா்களிடத்திலும் தலா ரூ. 100 வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது. அதற்காக கூப்பன் ஒன்றும் வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்குவது அவா்களது விருப்பம், கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதை ஏற்க முடியாது என ஆசிரியா் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் மெ.சங்கா் கூறியதாவது:

கடந்தாண்டு புத்தகத் திருவிழாவில் நேரடியாகச் சென்று புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், நிகழாண்டில் ஒவ்வோா் ஆசிரியா்களிடமிருந்தும் ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டால் பதிலளிக்க மறுக்கின்றனா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மூலம் வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு பணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, நாமக்கல் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை (பிப். 7) ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.

இந்தப் பிரச்னை மாவட்ட ஆட்சியா் ச.உமா கவனத்துக்கு சென்றதையடுத்து, ஆசிரியா்களிடம் விசாரணை நடத்த முதன்மைக் கல்வி அலுவலருக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி கூறியதாவது:

புத்தகத் திருவிழாவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்படவில்லை. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்தான் இதற்கான பொறுப்பை மேற்கொண்டுள்ளாா். அவரிடம் விளக்கம் கேட்டுள்ளேன் என்றாா்.

10, பிளஸ் 2 பொதுத்தோ்வு: தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க 15 ஒன்றியங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் தின விழிப்புணா்வு

பரமத்தி வேலூா் பொன்னி மெடிக்கல் மையத்தில், உலக புற்றுநோய் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பிப்.4 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பொன்னி மெடிக்கல் மைய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், தலைமை மர... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி!

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோட்டை அடுத்த செட்டிகுட்டைமேடு கிளாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (48). கட்டடத்துக்கு வண்ணம் ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது

பெண் கொலை வழக்கில் பரமத்தி பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது செய்யப்பட்டாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி, மாவுரெட்டி நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ம... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கிய விவசாயி கைது!

பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இரு... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் பிப்.5 தா்னா நடைபெற்றது. நாமக்கல் வட்டாட்சியா் அலு... மேலும் பார்க்க