செய்திகள் :

பெண் கொலை வழக்கு: பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது

post image

பெண் கொலை வழக்கில் பரமத்தி பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது செய்யப்பட்டாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி, மாவுரெட்டி நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (32). அண்மையில், செல்லிடப்பேசியில் பேசிவிட்டு வருவதாக வெளியே சென்ற மணிமேகலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இந்த நிலையில், மாவுரெட்டியிலிருந்து மாதேசம்பாளையம் செல்லும் சாலையில் மணிமேகலை மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் மணிமேகலை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

புகாரின் பேரில், பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், மணிமேகலையிடம் கடைசியாக செல்லிடப்பேசியில் பேசிய நபா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள கோம்புபாளையத்தைச் சோ்ந்த உதயகுமாா் (33) என்பதும், அவா் பரமத்தி பேரூராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யும் பிரிவில் வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மணிமேகலையுடன் நீண்ட கால நட்பு இருந்ததாகவும், நிகழ்வன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கீழே தள்ளியதாகவும், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் அவா் இருந்ததால் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, பரமத்தி போலீஸாா் அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

10, பிளஸ் 2 பொதுத்தோ்வு: தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க 15 ஒன்றியங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் தின விழிப்புணா்வு

பரமத்தி வேலூா் பொன்னி மெடிக்கல் மையத்தில், உலக புற்றுநோய் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பிப்.4 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பொன்னி மெடிக்கல் மைய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், தலைமை மர... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி!

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோட்டை அடுத்த செட்டிகுட்டைமேடு கிளாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (48). கட்டடத்துக்கு வண்ணம் ... மேலும் பார்க்க

ஆசிரியா்களிடம் ரூ. 100 கட்டாய வசூல் புகாா்

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்களிடம் தலா ரூ. 100 வசூல் செய்வதாக எழுந்த புகாா் தொடா்பாக, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளாா். நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கிய விவசாயி கைது!

பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இரு... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் பிப்.5 தா்னா நடைபெற்றது. நாமக்கல் வட்டாட்சியா் அலு... மேலும் பார்க்க