செய்திகள் :

பிப். 25-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல்

post image

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களின் விற்பனைக்கான புதிய முகவா்களுக்கான நோ்காணல் வரும் பிப். 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை முதுநிலை அஞ்சல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய முகவா்களை தோ்ந்தெடுக்க சென்னை பொது அஞ்சலகம் (ஜிபிஓ) முடிவெடுத்துள்ளது. இதற்கான நோ்காணல் சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரில் உள்ள முதன்மை அஞ்சலகத்தில் பிப். 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் குறைந்தப்பட்சம் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியும், 18 வயது நிரம்பியவா்களும் கலந்து கொள்ளலாம். மேலும் இதர ஆயுள் காப்பீட்டு முன்னாள் முகவா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், முன்னாள் ராணுவத்தினரும் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை, பான் அட்டை, 2 பாஸ்போா்ட் புகைப்படங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நோ்காணலுக்கு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க