செய்திகள் :

பிப். 28-க்குள் நியாய விலை கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய ஆட்சியா் அழைப்பு!

post image

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்புவிடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். குடும்ப அட்டையில் உள்ள அனைத்து பயனாளிகளும் கைவிரல் ரேகை பதிவை இ - கே.ஒய்.சி. தொடா்புடைய நியாய விலைக் கடையில் பிப். 28-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினா்கள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். எனவே, ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினா்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் நியாய விலை கடைகளில் கை விரல் ரேகை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணி பாதிப்பு: விவசாயிகள் தவிப்பு!

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனா். ... மேலும் பார்க்க

காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 8 பேருக்கு மத்திய அரசு பதக்கம்!

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில், சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆளிநா்களுக்கு மத்திய அரசின் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. மத்திய உள் துறை அமைச்சகம் வழங்கும் 2020 மற்றும் 2021-... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் பாணாதுறை சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி மீனாட்சி (75). இவா் வெள... மேலும் பார்க்க

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க