செய்திகள் :

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி: எல். முருகன்

post image

தில்லி தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. நண்பகல் மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி பாஜக - 46, ஆம் ஆத்மி - 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட முன்னிலையில் இல்லை.

தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பாஜகவினர் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!

இந்நிலையில் மத்திய பாஜக இணையமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தில்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள, தில்லி மாநில பாரதிய ஜனதா கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தில்லி மாநில மக்களிடத்தில் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள் என்பதற்கும், பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கேஜரிவால், அதிஷி தொடர்ந்து பின்னடைவு! மணீஷ் சிசோடியா முன்னிலை!

நல்லாட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த தில்லி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 70 தொ... மேலும் பார்க்க

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தில்லி தோல்வி குறித்து கேஜரிவால்

தில்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தில்லிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மக்களின் தீ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: அரவிந்த் கேஜரிவால் தோல்வி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடைந்துள்ளார்.70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ல் நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த... மேலும் பார்க்க

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: பிரியங்கா

தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை தெரிவித்தார். தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி தோல்வியைத் தேர்தல... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்வி: தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல்!

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில், தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பார்க்க