செய்திகள் :

பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்கள்! 3 ஆண்டுகளில் ரூ.259 கோடி செலவா?

post image

கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை பிரதமர் மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்கு மொத்தமாக ரூ.259 கோடி செலவானதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளுக்காக இந்திய தூதரகங்கள் செலவிட்ட தொகை குறித்த தகவலை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே கோரிக்கை வைத்திருந்தார். மேலும், அவருக்கான தங்குமிடம், போக்குவரத்து ஏற்பாடுகள், சமூக வரவேற்புகள் மற்றும் இதர செலவுகள் என விரிவான விவரங்களையும் கோரியிருந்தாா்.

கார்கேவின் கோரிக்கையை ஏற்ற மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்ஹெரிட்டா எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

இதையும் படிக்க: லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!

அந்த அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு மே முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மேற்கொண்ட அரசுப் பயணங்களுக்கான செலவின விவரங்கள், ஜொ்மனி முதல் குவைத் வரை 38 பயணங்கள் வாரியாக மத்திய அரசின் பதில் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக கிட்டத்தட்ட ரூ.259 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செலவுகள் தங்குமிடம், இடத்துக்கான கட்டணம், பாதுகாப்பு, போக்குவரத்து, இதர செலவீனங்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தங்குமிடத்துக்காக ரூ.104 கோடியும், இதர செலவுகளாக ரூ.75.7 கோடியும், போக்குவரத்துக்கு ரூ.71.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நாடுகளுக்கான செலவுகளாக அமெரிக்கா (ரூ.38.2 கோடி), ஜப்பான் (ரூ.33 கோடி), ஜெர்மனி (ரூ.23.9 கோடி), ரஷியா (ரூ.16.1 கோடி), பிரான்ஸ் (ரூ.15.7 கோடி), இத்தாலி (ரூ.14.4 கோடி) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (ரூ.12.7 கோடி) செலவிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆண்டுகாலத்தில் தனி நபருக்கான அதிகபட்ச செலவாக 2023 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்துக்கு மட்டும் ரூ.22.89 கோடியும், குறைந்தபட்ச செலவாக நேபாள பயணத்துக்கு ரூ.80.01 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டில் 8 நாடுகளுக்கும், 2023-ல் 10 நாடுகளுக்கும், 2024-ல் 16 நாடுகளுக்கும் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா.?

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க