செய்திகள் :

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்!

post image

பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயகாவின் தில்லி பயணத்தின்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக, அடுத்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு வர உள்ளார். மேலும் அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகவும் அவர் கூறினார்.

அதிபராக பதவியேற்று திசாநாயகாவின் முதல் இந்தியப் பயணத்திலேயே இருதரப்பு உறவு குறித்தும், பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையின்போது சம்பூர் சூரிய மின் நிலையத்தைத் திறப்பதுடன் கூடுதலாகப் பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.

2023ஆம் ஆண்டில் கிழக்கு திரிகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையத்தைக் கட்ட இலங்கை மின் வாரியமும், இந்தியாவின் அனல்மின் வாரியமும் ஒப்புக்கொண்டன.

“தேசிய நலனைப் பேணுவதற்காகப் பணியாற்றும் போது எங்கள் வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் நடுநிலையாக இருப்போம் என்றும் ஹெராத் கூறினார்.

2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை தீவு நாட்டிற்குப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு... மேலும் பார்க்க

பஞ்சாபில் கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டு வீச்சு

அமிர்தசரஸில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயில் மீது சனிக்கிழமை அதிகாலை இரு... மேலும் பார்க்க

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது.... மேலும் பார்க்க

தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு: 6 மாதக் குழந்தை பார்வை இழந்த பரிதாபம்!

மத்திய பிரதேசத்தில் 6 மாதக் குழந்தையை தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 13ல் கோலாரஸ் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் இந்த அதிர... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களின் மையமாகும் ஹம்பி! வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

பெங்களூரு : கர்நாடகத்தில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹம்பியில் கடந்த வாரம் நடைபெற்ற ‘ஹம்பி திருவிழாவைக்’... மேலும் பார்க்க

சரியாகப் படிக்கவில்லை.. மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை!

ஆந்திர மாநிலத்தில் சரியாகக் கல்வி கற்காத இரு மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வி. சந்திர கிஷோர் ... மேலும் பார்க்க