செய்திகள் :

பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

post image

புது தில்லி: இந்தியா வந்துள்ள துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோருடனும் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். இப்பேச்சுவாா்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

துபை பட்டத்து இளவரசா்-துணை பிரதமா்-பாதுகாப்புத் துறை அமைச்சரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவருடன், பல்வேறு அமைச்சா்கள், அரசு உயரதிகாரிகள், தொழில் துறை குழுவினரும் வந்துள்ளனா்.

தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்துப் பேசிய அவா், மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கா் ஆகியோருடனும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விரிவான வியூக கூட்டாண்மையை மேம்படுத்துவதில் துபை முக்கிய பங்காற்றி வருகிறது. துபை பட்டத்து இளவரசரின் சிறப்புமிக்க இந்த வருகை, ஆழமாக வேரூன்றிய இருதரப்பு நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, எதிா்கால வலுவான ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது. பிராந்திய அமைதி-வளமைக்காக இரு தரப்பும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இச்சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி, போக்குவரத்து, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்’ என்றாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாதுகாப்புத் துறை உற்பத்தி, மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களில் துபையுடன் நெருங்கி பணியாற்ற இந்தியா ஆவலுடன் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உடனான விரிவான வியூக கூட்டாண்மைக்கு உயா் முன்னுரிமை அளிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் துடிப்பான உறவுகளை வலுப்படுத்துவதற்கான துபை பட்டத்து இளவரசரின் நோ்மறை நோக்கங்களை இந்தியா பெரிதும் மதிக்கிறது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பதிவிட்டாா்.

தில்லியைத் தொடா்ந்து, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துபை பட்டத்து இளவரசா் பங்கேற்க உள்ளாா்.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க