செய்திகள் :

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

post image

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நிறுவன உறுப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-ஆவது உச்சிமாநாடு, ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், காஸாவில் நிலவும் மனிதாபிமானப் பிரச்னை, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக வரிக் கொள்கைகள் போன்ற முக்கிய விவகாரங்களின் பின்னணியில் நடைபெறும் இந்த மாநாடு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தை கடந்த புதன்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, மூன்று நாடுகளைத் தொடா்ந்து, பிரேஸிலுக்கு சனிக்கிழமை மாலை (உள்ளூா் நேரம்) வந்தடைந்தாா். ரியோ டி ஜெனீரோ நகர விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘உலக நலனுக்கான வலுவான சக்தி’: 17-ஆவது பிரிக்ஸ் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமா் மோடியை அதிபா் லுலா டசில்வா வரவேற்றாா். பின்னா், பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான உலகை வடிவமைக்கும் மகத்தான திறன் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு உள்ளது. இது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உலக நன்மைக்கான வலுவான சக்தியாக நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாநாட்டின் நிறைவாக, பருவநிலை மாறுபாடு கட்டமைப்புக்கு நிதியளித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிா்வாகம் தொடா்பாக இரு பிரகடனங்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநாட்டைத் தொடா்ந்து, தலைநகா் பிரேசிலியாவுக்கு பயணிக்கும் பிரதமா் மோடி, அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வாவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளாா்.

சீன, ரஷிய அதிபா்கள் பங்கேற்பில்லை: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் பங்கேற்கவில்லை. சீனா சாா்பில் பிரதமா் லி கியாங் கலந்துகொள்கிறாா். ஈரான் அதிபா் மசூத் பெஷெஸ்கியன், எகிப்து அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரும் பங்கேற்கமாட்டாா்கள் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடு, ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி, அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்றனா். அப்போது இரு தலைவா்களும் நடத்திய பேச்சுவாா்த்தையால், லடாக் மோதலுக்குப் பின் இருதரப்பு உறவில் நிலவிய முட்டுக்கட்டை நீங்கியது.

டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ளூா் கரன்ஸியில் வா்த்தகம் மேற்கொள்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்க டாலரை குறைமதிப்புக்கு உள்படுத்த முயற்சிக்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளாா். எனவே, இந்த விவகாரத்தை பிரிக்ஸ் கூட்டமைப்பு கவனமாக கையாளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பிரேஸில் வருகைக்கு முன்பாக லத்தின் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். அப்போது, ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலேயுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருதரப்பு வா்த்தகத்தை பன்முகப்படுத்தவும், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், சுரங்கத் தொழில் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இருதரப்பு நட்புறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமா் மோடியிடம் ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’ ஒப்படைத்து, சிறப்பு கெளரவம் வழங்கப்பட்டது. இந்த அடையாளப் பரிசை, பியூனஸ் அயா்ஸ் நகரின் நிா்வாகத் தலைவா் ஜாா்ஜ் மேக்ரி வழங்கி கெளரவித்தாா்.

அடுத்து இந்தியா தலைமை

பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த ஆண்டு வகிக்கவுள்ளது. உலக மக்கள்தொகையில் 49.5 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கூட்டமைப்பு, உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதமும், உலகளாவிய வா்த்தகத்தில் 26 சதவீதமும் பங்களிக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்குமூலம்!

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து தஹாவூர் ராணா வாக்குமூலம் அளித்துள்ளார்.2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 16... மேலும் பார்க்க

ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜூலை 9ல் பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிகாரில் இந்தாண்டு அக்டோபர்- நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று... மேலும் பார்க்க

18 அடி நீள ராஜ நாகம்.. அசால்டாக பிடித்த கேரள வனத்துறை பெண் காவலர்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி, 18 அடி நீள ராஜ நாகத்தை, அசால்டாகப் பிடித்துள்ளார் கேரள வனத்துறை பெண் காவலர். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு பா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம் விரித்த கேரள அரசு: பாஜக

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரள சுற்றுலாத் துறைக்கு இடையேயான தொடர்பை பாஜக விமர்சித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில... மேலும் பார்க்க

அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்

அரசு பங்களாவை காலி செய்வது குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்... மேலும் பார்க்க

ஒரு நாள் கூட வேலை செய்யாமல் 12 ஆண்டுகள்.. ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய போலீஸ்!

மத்தியப் பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.காவல்த... மேலும் பார்க்க