செய்திகள் :

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

post image

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஆர்ஐசி (RIC) மாநாடு நடைபெறவும் வாய்ப்பிருக்கிறது. ரஷியாவின் முன்னாள் பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமாகோவின் முயற்சியால் ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய உச்சி மாநாடு நடத்தப்பட்டது.

இதுவரையில் 3 முறை நடத்தப்பட்ட ஆர்ஐசி மாநாடு, 2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கரோனா தொற்றுக்காலத்தில் இருந்து நடத்தப்படவில்லை. இதனிடையே, இந்தியா - சீன ராணுவ வீரர்களிடையே மோதலும் ஏற்பட்டு விட்டது.

இதனைத் தொடர்ந்து, விடியோ அழைப்பு வாயிலாக மாநாடு நடத்தப்பட்டிருந்தாலும், அதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், ஜூலை மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியான ஆர்ஐசி மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்திருந்தது. இதனால், மாநாட்டில் சீனாவை இந்தியா சந்திக்குமா என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், ஆட்டோமொபைல் துறைக்கு மூலதனமான ஒருவகை காந்தங்களை இந்தியாவுக்கு சீனாதான் ஏற்றுமதி செய்து வரும் நிலையில், ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், உற்பத்தி நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆர்ஐசி மாநாட்டில் கலந்துகொண்டு, சீனாவை இந்தியா வலியுறுத்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். எதுவாயினும், மாநாட்டின்போதுதான் தெரிய வரும்.

இருப்பினும், மாநாட்டில் கலந்துகொண்டு, வர்த்தக உறவைத் தடையின்றி, தொடர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க