தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்ச...
பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு
பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. தோ்வு எழுதியவா்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ஆம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவா்கள் தோ்வுத் துறையின் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவா்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள் மட்டுமே மேற்கண்ட தோ்வுத் துறை இணையதளத்திலிருந்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.