GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோர...
பிளஸ் 2 தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை
திருச்செங்கோடு அருகே சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்த மாணவி, புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசியை அடுத்த வேட்டுவபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ், விவசாயி. இவரது மனைவி தீபா. இத்தம்பதிக்கு நட்சத்திரா (17) என்ற மகளும், சரவணன் (11) என்ற மகனும் உள்ளனா்.
திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயின்ற மாணவி நட்சத்திரா பிளஸ் 2 தோ்வு எழுதியிருந்தனா். சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தோ்வு முடிவு கடந்த 13-ஆம் தேதி வெளியானது. அதில் மாணவி நட்சத்திரா, கணித பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த அவா், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
வீடு திரும்பிய பெற்றோா் நட்சத்திரா விஷம் குடித்திருப்பதை அறிந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் இரு கண்களையும் அவரது பெற்றோா் தானமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளனா்.