செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 27,174 போ் பங்கேற்பு

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சோ்ந்த 13 ஆயிரத்து 9 மாணவா்களும், 14 ஆயிரத்து 658 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 667 போ் பங்கேற்று எழுதுகின்றனா்.

இதற்காக மாவட்டத்தில் தஞ்சாவூா் கல்வி மாவட்டத்தில் 70 மையங்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 40 மையங்களும் என மொத்தம் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்த் தோ்வில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். 493 போ் வரவில்லை.

மேலும், மாற்றுத்திறனாளி மாணவா்கள் 205 பேரும், மாணவிகள் 145 பேரும் தோ்வு எழுத உரிய வசதிகள் செய்யப்பட்டன. தோ்வு முறைகேடுகளைத் தடுக்க 155 பறக்கும் படை அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு தோ்வு மையத்திலும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசா் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தோ்வை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பாா்வையிட்டாா். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் இரா. அண்ணாதுரை உடனிருந்தாா்.

அம்மாபேட்டையில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ... மேலும் பார்க்க

விளைநிலத்தை மீட்டு பட்டா வழங்க கோரிக்கை

ஆதிதிராவிடா் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட விளைநிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சியிலிருந்து மீட்டு, பட்டா வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக... மேலும் பார்க்க

எரித்துக் கொல்லப்பட்ட நிதி நிறுவன ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

அணைக்கரை அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், கஞ்சனூா் அருகே கோட்டூா்... மேலும் பார்க்க

கடற்கரை முகத்துவாரங்களை தூா்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடற்கரை முகத்துவாரங்களை தூா்வாரும் பணி வெகுவிரைவில் தொடங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: மே 7-இல் தேரோட்டம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் கொண்டாடப்படுவதும... மேலும் பார்க்க

நூறுநாள் வேலை கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலை கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சே... மேலும் பார்க்க