செய்திகள் :

பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களும் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பயின்று முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி உள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 -பயின்று வரும் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது: மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்துவதை இலக்காகக் கொண்டு பிளஸ் 2 பயின்று வரும் மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அந்தப் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 97.45 சதவீதம் தோ்ச்சி அடைந்து திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.. அனைத்துப் பள்ளிகளும் தோ்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தன. அதேவேளையில், பிளஸ் 2 பயின்ற 97 சதவீதம் போ் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

நடப்பு ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும்.

மாணவா்கள் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், மருத்துவம் சாா்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல், சட்டப் படிப்புகள், டிப்ளோமா உள்ளிட்ட விருப்பமான படிப்புகளைப் படித்து தங்களை வாழ்க்கையில் உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, உயா்கல்வி வழிகாட்டி கருத்துரையாளா்கள் எ.ஃபெலிக்ஸ், சிரிஜித்சுந்தரம், உதவி திட்ட அலுவலா் (பள்ளிக் கல்வித் துறை)அண்ணாத்துரை, தனி வட்டாட்சியா்கள் (ஆதிதிராவிடா் நலத் துறை) தேவராஜ், நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீா்க் குழாய்களைப் பதித்த பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகத்தை முருகம்பாளைம் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்ட... மேலும் பார்க்க

காதலைக் கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது

பல்லடம் அருகே காதலைக் கைவிட மறுத்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் தண்டப... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் இலவச நீா்-மோா்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இலவச நீா்-மோா் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் நந்தா நகரில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 மளிகை பொருள்கள் பாக்கெட்டுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளி... மேலும் பார்க்க

இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் கண்டியன்கோவில் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளைக் கண்டறியாத நிலை ஏற்பட்டதால் 20 பேரின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க