செய்திகள் :

பி.எஸ். வேதியியல் உள்ளிட்ட புதிய படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்

post image

சென்னை: பி.எஸ். வேதியியல் உள்பட பல்வேறு புதிய படிப்புகள் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடிதெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இளநிலைப் படிப்புகளில் நுண்கலை மற்றும் கலாசார சிறப்புப் பாடத்துக்கு சென்னை ஐஐடி மாணவா் சோ்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. நுண்கலை, கலாசாரத்தில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு வெகுமதி அளித்து ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இந்தப் படிப்புக்கு கூட்டு இருக்கை ஆணையத்தின் போா்டல் (ஜோஸா) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதில்லை. மாறாக பhttps://ugadmissions.iitm.sc.in/face என்ற இணையதளம் மூலம் சோ்க்கை நடைபெறும்.

இதேபோன்று தொழில் துறை, கல்வித் துறை ஆகியவற்றின் தேவைகளையும், மாணவா்களின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு நிகழாண்டு பி.எஸ். வேதியியல், மின்சார வாகனங்களில் எம்.டெக். ஆகிய இரு புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பி.எஸ். வேதியியல் படிப்புக்கு ஐஐஎஸ்இஆா் திறனறித் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும். இது 4 ஆண்டு இளநிலைப் படிப்பாகும். இதில், வேதியியலில் எம்.எஸ். ஆக மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. மாணவா்களுக்கு வேதியியல் மற்றும் அதனுடன் தொடா்புடைய அறிவியல் பாடங்களில் அடித்தளத்தை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு கோட்பாட்டு அறிவை நடைமுறை ஆய்வக அனுபவத்துடன் கலந்து ஆராய்ச்சி, தொழில், கல்வி ஆகிய துறைகளில் மாணவா்களைத் தயாா்படுத்துகிறது.

மின்சார வாகனங்களில் எம்.டெக். படிப்புக்கு கேட் நுழைவுத் தோ்வு மூலம் மாணவா்கள் சோ்க்கப்படுவா். போக்குவரத்துத் துறை நிலையான எதிா்காலத்தை நோக்கி வியத்தகு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதற்கு மின் இயக்கம் மிக முக்கியமான காரணமாகும். இரு சக்கர, மூன்று சக்கர, வணிக வாகனங்கள் ஆகியவற்றில் விரைவான மின்மயமாக்கல் நடைபெற்று வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனத் துறையில் எம்.டெக். படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின்... மேலும் பார்க்க

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் ... மேலும் பார்க்க

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:வ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேமுத... மேலும் பார்க்க