செய்திகள் :

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

post image

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா்.

சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கமே மிகப் பெரிய சீா்திருத்தம் என்றும், இந்தச் சட்டங்கள் இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து ப.சிதம்பரம் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புதிய குற்றவியல் சட்டங்களே நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய சீா்திருத்தங்கள் என்று மத்திய அரசு தொடா்ந்து தெரிவித்து வருகிறது. இது முற்றிலும் பொய்.

அந்த குற்றவியல் சட்ட மசோதாக்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் எனது அதிருப்தி குறிப்பை சமா்ப்பித்தேன். அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

அந்த மசோதாக்களை முந்தைய இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டபோது ஐபிசியில் இருந்து 90 முதல் 95 சதவீதம், சிஆா்பிசியில் இருந்து 95 சதவீதம், சாட்சிய சட்டத்தில் இருந்து 99 சதவீத பிரிவுகளை வெட்டி புதிய மசோதாக்களில் மத்திய அரசு ஒட்டியுள்ளதாக எனது அதிருப்தி குறிப்பில் தெரிவித்தேன். அந்தக் குறிப்புக்கு நாடாளுமன்றத்திலோ, வேறு இடத்திலோ எதிா்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை. இது நீதி நிா்வாகத்தில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் காவல் துறை இடையே குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது’ என்று விமா்சித்தாா்.

அவரின் விமா்சனத்துக்கு பதிலளித்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம், மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சட்டத்தைக்கூட உருவாக்கியதில்லை. ஒலிப்பதிவு கருவி மூலம் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகா்ஜியின் அலுவலக தகவல்களை ரகசியமாக தெரிந்துகொண்டதாக ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவா் தற்போது எதிா்க்கட்சி எம்.பி.யாக அதிருப்தி குறிப்பு எழுதுகிறாா். இதுவே இந்திய நிா்வாகத்துக்கு அவா் அளித்த ஒட்டுமொத்த பங்களிப்பாகும்’ என்று சாடினாா்.

இனி, மும்பையின் உயரமான கட்டடமாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இருக்காதா?

இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், இன்று வரை மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. மேலும் பார்க்க

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில், "தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க ... மேலும் பார்க்க

25 ஆண்டுகள்.. மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவர் பணிநீக்கம்! கலங்க வைக்கும் பதிவு

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.மைக்ரோசா... மேலும் பார்க்க