செய்திகள் :

புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

post image

புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா் அடிப்படையில் அரசுக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது மெட்ரிக் டன் முறையை புதிதாக அமல்படுத்தியுள்ளனா். அரசு விதித்துள்ள மெட்ரிக் டன் அடிப்படையிலான கணக்கீட்டு வரி முறைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், 24 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் புதன்கிழமை முதல் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் 67 கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக கட்டட வேலைக்குத் தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் ஜல்லி, தாா்சாலை பணிக்கான ஜல்லி உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து சேலம் கிரஷா் ஜல்லி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

புதிய வரி விதிப்பால் உற்பத்தி செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றுக்கு தற்போதைய விலையில் இருந்து, யூனிட்டுக்கு சுமாா் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு உரிமையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, பழைய நடைமுறைப்படி கன மீட்டரை அடிப்படையாக கொண்டு வரி வசூல் செய்ய வேண்டும். புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க

2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். ஓமலூரில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலாப் பயணிகள்

கோடை வாச ஸ்தலமான ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். ‘ஏழைகளின் ஊட்டி’ ... மேலும் பார்க்க