பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
புதுகையில் ஆக. 11, 18-இல் 5.47 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கத் திட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 மற்றும் 18-ஆம் தேதிகளில் மொத்தம் 5.47 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 11 மற்றும் 18-ஆம் தேதிகள் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1-19 வயதுடைய 4,39,271 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 1,08,622 மகளிருக்கும் என மொத்தம் 5,47,893 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியா்கள், சுகாதார செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவ அலுவலா்கள் ஆகியோா் மேற்பாா்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளன.
பள்ளி செல்லாத சிறாா்களுக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய மகளிருக்கும் (கருவுற்ற மற்றும் பிரசவித்த தாய்மாா்கள் நீங்கலாக) அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க அல்பென்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளன. 11-ஆம் தேதி விடுபட்டோருக்கு 18-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மிகி), 2 முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயது வரை உள்ள மகளிருக்கு முழு மாத்திரையும் (400 மிகி) வழங்கப்படும்.
குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை சரி செய்யப்பட்டு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் உருவாகிறது.