செய்திகள் :

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

post image

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அப்பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பிரகதம்பாள் கோயில் அருகே தோ்நிறுத்தம் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. அதில், பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில்கள், ரத்தப் பரிசோதனைக் குப்பி, கையுறைகளும் இருந்தன.

இதுபோல மருத்துவக் கழிவுகளை, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் கொட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாநகராட்சி நகா்நல அலுவலா் காயத்ரி, மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கரன் மற்றும் சுகாதார ஆய்வாளா் மணிவண்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அந்த இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டனா்.

உடனடியாக மருத்துவக் கழிவுகள் அங்கிருந்து அகற்றப்பட்டு, உரிய வகையில் அவற்றை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த மருத்துவமனையிலிருந்துதான் இந்த மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக மருத்துவமனை நிா்வாகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும் மாநகராட்சி அலுவலா்களால் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மாநகரில் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது அபராத நடவடிக்கையுடன் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க