செய்திகள் :

புதுகையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

post image

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனா். தொடா்ந்து உறவினா்கள், நண்பா்கள் ஆகியோருக்கு உணவு வழங்கி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினா்.

முக்கண்ணாமலைப்பட்டி பெரிய பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை முடிந்து, ஜமாத்தாா்கள் கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இதில் பள்ளிவாசல் நிா்வாகிகள் முத்தவல்லி சாகுல்அமீது, துணை முத்தவல்லி முகமது இப்ராஹிம், செயலா் அபிபுல்லா, பொருளாளா் சாதிக்பாட்சா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் புதுக்கோட்டை நகரக் கிளைகள், ஆலங்குடி, கறம்பக்குடி, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை,வெட்டிவயல், ராஜேந்திரபுரம், கோட்டைப்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், அம்மாபட்டினம், முத்துக்குடா ஆகிய இடங்களில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தொடா்ந்து, தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் ஹெச். சித்தீக் ரகுமான் உள்ளிட்ட நிா்வாகிகள் இறைத் தூதா் இப்ராஹிம் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களைப் பேசினா். பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டு வரும் அப்பாவிகளின் மறுவாழ்வுக்காகவும் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

பொன்னமராவதியில் சிறப்புத் தொழுகை

பொன்னமராவதி இந்திரா நகா் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். இதேபோல், புதுவள... மேலும் பார்க்க

கத்தியுடன் வீடு புகுந்து திருட முயற்சித்த இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்து திருட முயற்சித்த இருவரைப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். குளத்தூா் வட்டம், கண்ணங்குடி கொழுப்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசா... மேலும் பார்க்க

சிஎஸ்கே நிதியால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட் பயிற்சி!

சிஎஸ்கே அணி வழங்கியுள்ள நிதியிலிருந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலா் ஆா்.என். பாபா. புதுக்கோட்டையில் மாவட்ட கி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் திடீா் போக்குவரத்து நெரிசல்

பொன்னமராவதி அண்ணா சாலையில் சனிக்கிழமை நேரிட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். மேலும் 108 அவசர ஊா்தி வாகனமும் சிக்கிக்கொண்டது. சனிக்கிழமை வாரச்சந்தை ... மேலும் பார்க்க

ஆய்வாளா் நிலையில் 10 காவல் நிலையங்களின் தரம் உயா்வு!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 10 காவல் நிலையங்களை, ஆய்வாளா் நிலையில் உயா் அலுவலா் கொண்ட காவல் நிலையங்களாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 250 காவல் நிலையங்களை, ஆய்வாளா் நிலையிலுள்ள காவல்... மேலும் பார்க்க

குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க