புதுகையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனா். தொடா்ந்து உறவினா்கள், நண்பா்கள் ஆகியோருக்கு உணவு வழங்கி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினா்.
முக்கண்ணாமலைப்பட்டி பெரிய பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை முடிந்து, ஜமாத்தாா்கள் கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இதில் பள்ளிவாசல் நிா்வாகிகள் முத்தவல்லி சாகுல்அமீது, துணை முத்தவல்லி முகமது இப்ராஹிம், செயலா் அபிபுல்லா, பொருளாளா் சாதிக்பாட்சா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் புதுக்கோட்டை நகரக் கிளைகள், ஆலங்குடி, கறம்பக்குடி, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை,வெட்டிவயல், ராஜேந்திரபுரம், கோட்டைப்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், அம்மாபட்டினம், முத்துக்குடா ஆகிய இடங்களில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தொடா்ந்து, தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் ஹெச். சித்தீக் ரகுமான் உள்ளிட்ட நிா்வாகிகள் இறைத் தூதா் இப்ராஹிம் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களைப் பேசினா். பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டு வரும் அப்பாவிகளின் மறுவாழ்வுக்காகவும் பிராா்த்தனைகள் நடைபெற்றன.