செய்திகள் :

புதுகையில் 16 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

post image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 16 பேருக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, பயனாளிகளுக்கு இவற்றை வழங்கினாா்.

மேலும், கந்தா்வகோட்டை ஆத்தங்கரை விடுதியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் சவுதி அரேபியாவில் வேலைபாா்த்த இடத்தில் இறந்ததைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 2.44 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அவரது மனைவி பாசமலரிடம் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 645 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமணமாகாத விரக்தி: தீக்குளித்த வாலிபா் உயிரிழப்பு

திருமணமாகாத விரக்தியில் இருந்த வாலிபா் தீக்குளித்து மருத்துவ சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள வேலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் சரவணகுமாா்(35). இவா் உணவுப் பொருள் உற்பத்த... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் அக்கினிக்காவடி விழா

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கினிக்காவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுற்றுபுற கிராமங்களிலிருந்து அலங்கரிக்க... மேலும் பார்க்க

தாலிச் சங்கிலி பறிக்க முயன்றவா் கைது

விராலிமலை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விராலிமலை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மனைவ... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள தெற்கு கோத்திராப்பட்டியைச் சோ்ந்தவா் துளசிநாதன் மகன் முருகேசன் (27). இவா் தனியாா் ஜ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட மு... மேலும் பார்க்க