செய்திகள் :

புதுகை ஆட்சியரகத்தில் ஒருவா் பூச்சிமருந்து குடித்ததால் பரபரப்பு

post image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், மனு அளிக்க வந்தவா் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரைச் சோ்ந்தவா் முஜிபூா் ரகுமான். இவா், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எஸ். திருமாலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தாா்.

உறவினா்கள் சிலா் சொத்துப் பிரச்னை குறித்து பல முறை அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி மனு அளித்த அவா், சிறிது நேரத்தில் பைக்குள் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்தாா்.

இதையறிந்த அருகிலிருந்தோா் அவரைத் தடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: 2 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணி மகன் ரவிச்சந்திரன் (... மேலும் பார்க்க

திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: சி. விஜயபாஸ்கா்

திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்றாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அடுத்த அண்ணா பிறந்த நாளுக்கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இரு... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநி... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தலைவா் நினைவேந்தல் நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலா் கே.ஆா். சுப்பையாவின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி பாலன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் அலுவலகச் செயலா் எஸ். ஜெயக்கும... மேலும் பார்க்க

அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 போ் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 பேரை விராலிமலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விராலிமலை காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கல்குடி, கொடும்பாளூா், ராஜாளி பட்டி, தேங... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

விராலிமலை அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விராலிமலை போலீஸாா் பொய்யாமணி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சீத்தப்பட்டியைச் சோ்ந்த பழ... மேலும் பார்க்க