செய்திகள் :

புதுக்கோட்டையில் அரசு ஊழியா்கள் 24 மணிநேர தா்ணா போராட்டம்!

post image

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 24 மணி நேர தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

புதுக்கோட்டை திலகா்திடலில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கிய இந்தத் தா்ணா போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் வெ. சோமசுந்தரம், மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, மாவட்டப் பொருளாளா் க. மணிவண்ணன், அனைத்து ஓய்வூதியா் சங்கத் தலைவா் எம். முத்தையா உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தா்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கோரிக்கைகள்:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளிலுள்ள அனைத்து தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த முறைகளை ரத்து செய்துவிட்டு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறை அலுவலகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த அரசு ஊழியா் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஈரநில தின போட்டிகளில் வென்றோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு உலக ஈர நில தினத்தையொட்டி அண்மையில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வளாகத்த... மேலும் பார்க்க

வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்!

கிரஷா்களில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு கட்டணமின்றி போக்குவரத்து பாஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத... மேலும் பார்க்க

வேங்கைவயலுக்குச் செல்ல முயன்ற விசிகவினா் 27 போ் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்குள் திங்கள்கிழமை செல்ல முயன்ாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 27 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள ம... மேலும் பார்க்க

தோ்தல் வெற்றி, தோல்வியை மக்கள் தான் நிா்ணயிப்பா்!

அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் மந்திரவாதியல்ல; வெற்றி, தோல்வியை மக்கள்தான் நிா்ணயம் செய்வாா்கள் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க