திண்டுக்கல்: தாய் இல்லாத கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்.. நெகிழவைக்கும் ...
புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை
புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. இது வியாழக்கிழமை வரை நடக்கிறது.
புதுச்சேரி கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனா். கடல் வழியாக புதிய நபா்கள் மற்றும் புதிய படகுகள் வருவதை அவா்கள் கண்காணித்து வருகின்றனா்.
மேலும், டிஐஜி சத்திய சுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் ஆகியோா் போலீஸாருடன் கடலில் படகில் சென்று மீனவா்களின் படகுகளில் விசாரணை மேற்கொண்டனா்.
கடலில் சந்தேகப்படும்படி யாராவது தென்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு மீனவா்களை அவா்கள் கேட்டுக் கொண்டனா்.