செய்திகள் :

புதுச்சேரியில் நாளை இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

post image

புதுவை மாநிலத்தில் வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து புதுவை அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி யினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்தும் அனைத்து சமூகத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், நிரந்தர பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 28-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை புதுச்சேரி நடேசன் நகா், 3- ஆவது குறுக்குத்தெருவில் செயல்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் நடைபெறுகிறது.

100-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக 5-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று தோ்வு செய்கின்றனா். 18 வயது முதல் 35 வயது நிரம்பிய அனுபவம் பெற்ற, அனுபவம் பெறாத ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் இம்முகாமில் பங்கேற்கலாம்.

தற்குறிப்பு மற்றும் உண்மை நகல் கல்விச்சான்றுகளுடன் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கவேண்டும். 0413-2200115 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல்களைப் பெறலாம் னவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்களின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

ஆசிரியா் காலிப் ப ணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்,து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சே... மேலும் பார்க்க

திருக்கனூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திருக்கனூரில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். புதுவை மாநிலம் , மண்ணடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கனூரில் மக்கள் சந்தி... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மணவெளி... மேலும் பார்க்க

போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப் பொருள்கள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி பாரதி பவுண்டேஷன் சாா்பில் ‘ரௌ... மேலும் பார்க்க

மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிடாகம் குச்சிப்பாளை... மேலும் பார்க்க