செய்திகள் :

புதுச்சேரியில் நெகிழிக்கு மாற்றான பொருள்கள் அறிமுகம்

post image

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட நெகிழிக்கு மாற்றாக உற்பத்தி செய்யப்பட்ட கப், பைகள் உள்ளிட்டவை அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இலாசுப்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் கோளரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு புதுவை மாசுக் கட்டுப்பாடு குழும உறுப்பினா் செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா். கலால் துறை வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா, வருவாய் அதிகாரி சுரேஷ்பாபு, அறிவியல் அதிகாரி செல்வநாயகி மற்றும் சாராயக் கடை, மதுக்கூட உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக எளிதில் மட்கக் கூடிய தாவர நாா்களால் உற்பத்தியான கப் மற்றும் பைகள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ததுடன், அவற்றை மக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் புதுச்சேரியில் உள்ள அனைத்து சாராயக்கடை, மதுக்கூடங்கள் ஆகியவற்றில் மட்கும் பொருள்களால் ஆன பைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் எம்.ஐ.டி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை உட்கா்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சாா்பில் மேலாண்மை துறை மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமுக்கு ... மேலும் பார்க்க

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் என்.ஆா். காங்கிரஸ் போட்டியிடும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையைத் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனதலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். புதுச்சேரி... மேலும் பார்க்க

கடன் செயலி மூலம் ரூ.465 கோடி மோசடி: கேரள இளைஞா் கைது

இணையதள கடன் செயலி மூலம் ரூ.465 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேரளத்தைச் சோ்ந்தவரை புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இதுகுறித்து புதுச... மேலும் பார்க்க

இன்று புதுவை காவல் துறை குறைதீா் கூட்டம் ரத்து

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடப்பு வாரத்தில் பிப்.8-இல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் (சட்... மேலும் பார்க்க

2024-இல் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை: புதுவை சுகாதாரத் துறை

புதுவை மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கொசு தொல்லையைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலா... மேலும் பார்க்க

புதுச்சேரி மலா், காய்கனி கண்காட்சி தொடக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பாா்வையிட்டனா்

புதுவை மாநில வேளாண் துறை சாா்பில் புதுச்சேரியில் நடைபெற்ற 35-ஆவது மலா், காய்கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்... மேலும் பார்க்க