செய்திகள் :

பூனையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனை!

post image

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் வளர்ப்புப் பூனையின் உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிய அதன் முடிகளை காவல் துறையினர் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

நல்கொண்டாவைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக வளர்த்து வந்த பூனை, கடந்த 2024 ஆம் ஆண்டு காணமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது பக்கத்து வீட்டில் அவரது பூணையைப் போன்றே வேறொரு நிறத்தில் ஒரு பூனை வளர்க்கப்பட்டு வருவதை அவர் கவனித்துள்ளார். இதுகுறித்து, தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்ததினால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, புஷ்பலதா வளர்த்து வந்த பூனையை தனது பக்கத்து வீட்டுக்காரர் திருடியதுடன் அதனை தான் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக அவர் அந்த பூணையின் உடலில் சாயம் பூசி நிறம் மாற்றியுள்ளதாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்

அந்த புகாரில் புஷ்பலதா தனது பக்கத்து வீட்டுக்கு சென்றபோது அந்த பூனை அடையாளம் கண்டு தன்னிடம் வந்ததாகவும், தனது வெள்ளை நிறப் பூனைக்கு அவர்கள் பழுப்பு நிறத்தில் சாயம் பூசியுள்ளதாகவும், எனவே தனது பூனையை மீட்டு தருமாறு கூறப்பட்டிருந்தது.

ஆனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர் அது தன்னுடைய பூணை என்றும் அவர் அந்த பூனையுடன் சேர்த்து மொத்தம் 6 பூனைகள் தனது வீட்டில் வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த குழப்பத்திலிருந்து அந்த பூனையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க காவல் துறையின் அந்த பூனையின் உடலிலிருந்து முடிகளை சேகரித்து அதை தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பியுள்ளனர். அந்த சோதனை முடிந்து அதன் அறிக்கை வெளியான பின்னரே உண்மையான உரிமையாளர் யார் என்று தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தில்லி முதல்வர் பர்வேஷ்?

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வர... மேலும் பார்க்க

மணிப்பூர்: துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பிஷ்னுபூரின் அய்கீஜங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று (... மேலும் பார்க்க

ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த கரு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி... மேலும் பார்க்க

நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2... மேலும் பார்க்க

நியூயார்க்கில் ரொனால்டோவின் 12 அடி உயர வென்கல சிலை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வென்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.போர்த்துகல் நாட்டைச்... மேலும் பார்க்க

அம்மா மருந்தகங்கள் மூடப்படாது! - ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிர... மேலும் பார்க்க