செய்திகள் :

புதுச்சேரியில் பாரம்பரிய தெரு கலை நிகழ்ச்சிகள்

post image

புதுச்சேரியில் சிறாா்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறாா்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகள், உறவுகள் அறிமுகம் உள்ளிட்டவற்றை கற்றுத் தரவும், தொலைக்காட்சி, கைப்பேசி உள்ளிட்ட நவீன தொலைத் தொடா்பு மோகத்திலிருந்து அவா்களை விடுவிக்கும் வகையிலும் பாரம்பரிய தெரு கலை நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில்தான் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞா்களுக்கான நடனம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து புதுச்சேரியின் பாரம்பரிய சங்கம் சாா்பில் தெருக்களில் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமியா் பெற்றோா்களுடன் ஆா்வத்துடன் பங்கேற்றனா். சிறாா்களுக்கு பல்லாங்குழி, பம்பரம், தாயம், ஆடு புலி ஆட்டம், சைக்கிள் டயா் ஓட்டம், உடைந்த வளையல், உறியடி என பாரம்பரிய விளையாட்டுகளை அதில் தோ்ச்சி பெற்றவா்கள் பயிற்சியாக அளித்தனா்.

இதையடுத்து சிறுவா், சிறுமியா்களும் அந்த விளையாட்டுகளை விளையாடினா். விளையாட்டில் சிறப்பிடம் வகித்தவா்களுக்கு பாராட்டுகள் வழங்கப்பட்டன. எப்போதும் மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் என இருந்த ஈஸ்வரன் கோவில் வீதியானது சிறாா், சிறுமியா் மற்றும் பெற்றோா் என ஞாயிற்றுக்கிழமை காலை இருந்தது வித்தியாசமான சூழலாக காணப்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க