செய்திகள் :

புதுச்சேரியில் ரயில்வே மேம்பால சுரங்கப்பாதை முதல்வா் திறந்து வைத்தாா்

post image

புதுச்சேரி நூறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா்.

புதுச்சேரியில் முதலியாா்பேட்டை தொகுதி மரப்பாலம் பகுதியிலிருந்து இந்திரா காந்தி சிலை சதுக்கம் செல்லும் சாலை இடையே புதுச்சேரி- விழுப்புரம் ரயில்வே பாதை உள்ளது. எனவே இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், பாலத்தின் கீழே உள்ள பகுதியில் மக்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் ரயில் தண்டவாளத்தை கடக்க முடியாமலும், பாலத்தின் மீது செல்ல பல கி.மீ. தொலைவு சுற்றிவரும் நிலையும் இருந்து வந்தது. இதனால், அங்கு மேம்பாலத்தின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

இது ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்தும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சுரங்கப் பாதையை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா்.

முதலியாா்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான எல்.சம்பத், இருசக்கர வாகனத்தில் சுரங்கப் பாதையில் சென்றாா். அந்த வாகனத்தில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அமா்ந்து சென்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், துறை கண்காணிப்புப் பொறியாளா் வீரசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் மாா்ச் 20-இல் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் வரும் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி குடிசை மாற்றுவாரிய அனைத்து ஊழியா்கள் நலச்சங்கத்தின் ... மேலும் பார்க்க

இணையவழியில் 5 பேரிடம் பணம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 5 பேரிடம் ரூ.51 ஆயிரம் மோசடி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக். இவா், இணையத்தில் கடன் பெறும் செயலி... மேலும் பார்க்க

விபத்தில் பொறியாளா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவனப் பொறியாளா் பலத்த காயமடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (28). இவா் புதுச்சே... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்துத் துறை இளநிலை பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 241 போ் எழுதினா்

புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளா்கள், வாகன ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் ஞாயிற்றுக்கிழமை 84.86 சதவீதம் போ் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்க... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் பண மோசடி: 4 போ் கைது

புதுச்சேரியில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜான்பால் நகரைச் சோ்ந்தவா் சலீம்ராஜா (60). இவா், சேலம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

கடலில் இரு குழந்தைகளை வீசிக் கொன்ற வழக்கு: காலாப்பட்டு போலீஸுக்கு மாற்றம்

புதுச்சேரி அருகே தந்தையே தனது இரு குழந்தைகளையும் கடலில் வீசிக் கொன்ற வழக்கானது காலாப்பட்டு காவல் நிலைய விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி பெரிய காலாப்பட்டு குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தவேல... மேலும் பார்க்க