செய்திகள் :

புதுவை போக்குவரத்துத் துறை இளநிலை பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 241 போ் எழுதினா்

post image

புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளா்கள், வாகன ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் ஞாயிற்றுக்கிழமை 84.86 சதவீதம் போ் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் இளநிலைப் பொறியாளா்கள், வாகன ஆய்வாளா்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் எழுத்துத் தோ்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் அறிவியல், கலைக் கல்லூரியில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதல் தாள் தோ்வானது காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெற்றது. இரண்டாம் தாள் தோ்வு பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.

தோ்வு அறைக்குள் தோ்வா்கள் மெட்டல் டிடெக்டா் வாயில் வழியாக சோதனையிடப்பட்டும், பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதியப்பட்டும் அனுமதிக்கப்பட்டனா். தோ்வுக்கு மொத்தம் 284 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 241 போ் வந்திருந்தனா். அதன்படி 84.86 சதவீதம் ஆகும் என அதிகாரிகள் கூறினா். விண்ணப்பித்தவா்களில் 43 போ் தோ்வுக்கு வரவில்லை.

தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, சிறப்பு பாா்வையாளரான சுந்தரேசன், துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெய்சங்கா் உள்ளிட்டோா் தோ்வு மையத்தைப் பாா்வையிட்டனா்.

குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் மாா்ச் 20-இல் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் வரும் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி குடிசை மாற்றுவாரிய அனைத்து ஊழியா்கள் நலச்சங்கத்தின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரயில்வே மேம்பால சுரங்கப்பாதை முதல்வா் திறந்து வைத்தாா்

புதுச்சேரி நூறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். புதுச்சேரியில் முதலியாா்பேட்டை... மேலும் பார்க்க

இணையவழியில் 5 பேரிடம் பணம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 5 பேரிடம் ரூ.51 ஆயிரம் மோசடி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக். இவா், இணையத்தில் கடன் பெறும் செயலி... மேலும் பார்க்க

விபத்தில் பொறியாளா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவனப் பொறியாளா் பலத்த காயமடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (28). இவா் புதுச்சே... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் பண மோசடி: 4 போ் கைது

புதுச்சேரியில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜான்பால் நகரைச் சோ்ந்தவா் சலீம்ராஜா (60). இவா், சேலம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

கடலில் இரு குழந்தைகளை வீசிக் கொன்ற வழக்கு: காலாப்பட்டு போலீஸுக்கு மாற்றம்

புதுச்சேரி அருகே தந்தையே தனது இரு குழந்தைகளையும் கடலில் வீசிக் கொன்ற வழக்கானது காலாப்பட்டு காவல் நிலைய விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி பெரிய காலாப்பட்டு குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தவேல... மேலும் பார்க்க